Header Ads



பலாங்கொடை நகரசபையின் புதிய முதல்வராக ரூமி நியமனம் - இரத்தினபுரி மாவட்ட உள்ளுராட்சி மன்றம் ஒன்றின் 1 வது முஸ்லிம்


(ஏ.ஏ.எம்.பாயிஸ்)

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ அவர்களின் பணிப் புரைக்கமைய பலாங்கொடை நகர சபையின் புதிய முதல்வராக எம்.ரீ. எம்.ரூமி தெரிவு செய்யப்பட்டுள்ளா ர்.

2006 ஆண்டு முதல் பலாங்கொடை நகர சபையின் உறுப்பினராக தெரி வு செய்யப்பட்டு இன மத வேறுபாகளின்றி அளப்பரிய சேவைகளை நி றைவேற்றியதன் மூலம் இறுதியாக நகர சபையின் உப தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

புதிய தலைவராக நேற்று முதல் தனது முதல்வர் கடமைகளை பொறுப்பேற்ற இவர் பலாங்கொடை நகர சபை வரலாற்றின் முதலாவது முஸ்லிம் தலைவராகவும் இரத்தினபுரி மாவட்டத்தின் உள்ளுராட்சி மன்றம் ஒன்றின் முதலாவது முஸ்லிம் தலைவராகவும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்த க்கதாகும். இவர் பிரபல உடற் பயிற்சி வளவாளரும் பலாங்கொடையை சேர்ந்த மொகமட் தாஹிர் தம்பதிக ளின் சிரேஷ்ட புதல்வரும் ஆவார்.


1 comment:

  1. இவர் பலாங்கொடை நகர முதலாவது முஸ்லிம் தலைவர் என்பது பிழை. இதற்கு முன்னர் தலைவராக A.L.M.அபுசாலி அவர்கள் இருந்துள்ளார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.