Header Ads



கொரோனாக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்கும் இலங்கை


கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசி தயாரிக்கும் நடவடிக்கையை இலங்கை வைத்திய பரிசோதனை நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

தடுப்பூசி தயாரிக்கும் பணி கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பித்ததாக விசேட வைத்தியர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தடுப்பூசி தயாரிப்பதற்கான வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்தப் பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

விசேட வைத்தியர்கள் சபையினால் தடுப்பூசி தயாரித்த பின்னர் அதன் முடிவுகளை பெற்றுக் கொள்வதற்கு ஒரு மாத காலமாகும்.

அந்த தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் சுகாதார சேவை ஊழியர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பிரிவில் இணைந்துள்ள பாதுகாப்பு இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருக்கு முதலில் வழங்கப்படும்.

தயாரிக்கப்படும் தடுப்பூசியினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் கடந்த வார இறுதியில் பரீட்சார்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விசேட வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. தடுப்பூசி தயாரித்தபின் ஒரு வைத்திய சங்கம் சொல்லும் அதை மக்களுக்கு கொடுக்கலாம் என்று இன்னொரு சங்கம் சொல்லும் முடியாது என்று. கடைசியில் மக்கள் பாடு அம்போ தான்.சரி தம்மிக பாணி எங்கேபா?

    ReplyDelete
  2. ஜாதி மதம் இல்லதா உசியாக இருந்தா நல்லம்

    ReplyDelete
  3. ஜாதி மதம் இல்லாமல் இருந்தா நல்லம்

    ReplyDelete
  4. வெறும் ஊசியை மட்டும்தான் தயாரிப்பாளர்கள்

    ReplyDelete

Powered by Blogger.