Header Ads



புதைப்பதா..? அடக்கம் செய்வதா..?? என்று தீர்வு வழங்காமல் இனவெறி வளர்க்கப்படுகிறது - காவிந்த Mp


புதைப்பதா?அல்லது அடக்கம் செய்வதா?என்று தீர்வு வழங்காமல் இனவெறியை அரசாங்கம் வளர்த்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜெயவர்தன தெரிவித்தார். இன்று(03.01.2021) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று, இந்த அரசாங்கம் மக்களை முட்டாளாக்குகிறது, பொருளாதாரத்தை கட்டியெழுப்பத் தவறிவிட்டது, இனவெறியை விதைக்கிறது. அனைத்து நாடுகளும் கொவிட் மரணங்களை புதைப்பதற்கு அனுமதியளிக்கும் போது இலங்கை அரசாங்கம் அரசியல் இலாபம் தேட முனைகிறது.அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை முற்றிலுமாக இலங்கையின் சகல இன மக்களும் இழந்துவிட்டனர்.

இந்த அரசாங்கம் நியமிக்கப்படுவதற்கு முன்னர், ஈஸ்டர் தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடித்து தன்டனை வழங்குவதாக கூறினர்,மத்திய வங்கி கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறினர்,இதுவரை எவறும் கைது செய்யப்படவில்லை என்றும் நாட்டுப்பற்றாளர்கள் என்று கூறிய தற்போதைய ஆட்சியாளர்கள் அரச நிதிகளை சூறையாடுகின்றனர் என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.