Header Ads



சிகிச்சைக்கு வருவதற்கு முன்னதாக முன்பதிவு செய்யுமாறு, தேசிய கண் வைத்தியசாலை கோரிக்கை


(சி.எல்.சிசில்)

தேசிய கண் வைத்தியசாலை சிகிச்சைக்கு வருவதற்கு முன்னதாக முன்பதிவு ஒன்றைச் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவ்வைத்தியசாலை அறிவித்துள்ளது.

தொற்று நோயை எதிர்கொண்டு தேசிய கண் வைத்தியசாலைச் செயற்பாடுகளில் எழுந்துள்ள நடைமுறைப் பிரச்சினைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கை கண் வைத்தியசாலையின் சிறப்பு சிகிச்சைக்கு தினமும் அதிகளவு நோயாளர்கள் வருகை தருகின்றனர். தற்போது நிலவும் தொற்று நோய் பரவல் காரணமாக சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது கடினமானது என வைத்தியசாலையின் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

No comments

Powered by Blogger.