Header Ads



அமைச்சுப் பதவிகளில் மாற்றம் வரப்போகிறதா..? நீதியமைச்சிலும் மாற்றம் ஏற்படுமா..??


அமைச்சு பதவிகளில் நியமிக்கப்பட்ட அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட துறைகளில் கடந்த சில மாதங்களாக ஒரு சிலர் மாத்திரமே திருப்தியடைய கூடிய பணிகளை செய்துள்ளதாகவும் இது தொடர்பாக ஜனாதிபதி கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் அரசாங்கத்தை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அடுத்த சில தினங்களில் அமைச்சரவையில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த காலம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்ட நீதியமைச்சு மற்றும் துறைமுகம், கப்பல் துறை அமைச்சு உட்பட பல முக்கிய அமைச்சு பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அமைச்சரவை மாற்றத்திற்கான வரைவு ஒன்றை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச இன்று உருவாக்கி வருவதாக தெரியவருகிறது.

இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான டயனா கமகேவுக்கு ராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக பேசப்படுகிறது.

அமைச்சு பதவிகளில் நியமிக்கப்பட்ட அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட துறைகளில் கடந்த சில மாதங்களாக ஒரு சிலர் மாத்திரமே திருப்தியடைய கூடிய பணிகளை செய்துள்ளதாகவும் இது தொடர்பாக ஜனாதிபதி கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

2 comments:

  1. தகுதி இல்லாமல் ஜனாதிபதியானது முதல் அதிருப்தி எனவே அவனது அமைச்சர்களும் அமைச்சும் தகுதியில்லாமல் தானே இருக்கும், கோட்டாவின் ஆட்சியில் திருப்தியை எதிர்பார்த்ததே முதல் தப்பு மக்களே

    ReplyDelete
  2. குடும்ப உறுப்பினர்களால் கெபினட்டை நிரப்ப இன்னும் குடும்ப அங்கத்தவர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து குடும்ப உறவுகளை உறுதிப்படுத்திக்ெகாள்வது மிகவும் அவசியமாகும்.

    ReplyDelete

Powered by Blogger.