Header Ads



மோடிக்குக்கு இலங்கை பிரதமர் பாராட்டு


இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதை கொரோனா வைரசின் முடிவின் ஆரம்பமாக கருதுவதாக இலங்கை தெரிவித்துள்ளது.

இந்தியா கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்கும் பாரிய நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளமை குறித்து இந்திய பிரதமருக்கு இலங்கை பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மிகவும் முக்கியமான கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை செலுத்தும் பெரும் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளமை குறித்து தனது டுவிட்டர் செய்தியில் பிரதமர் இந்திய பிரதமருக்கும் மக்களிற்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

நாங்கள் இதனை கொரோனா வைரசின் முடிவின் ஆரம்பமாக கருதுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Jockers statement, is there any meaningful issue???

    ReplyDelete

Powered by Blogger.