Header Ads



இலங்கையில் முதல் கொரோனா தடுப்பூசியை, ஏற்றிய மருத்துவர் வெளியிட்டுள்ள தகவல்கள்


இந்தியாவில் இருந்து பெறப்பட்ட கொரோனா தடுப்பூசியானது மிகவும் பாதுகாப்பானது என மருத்துவ நிபுணர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இந்திய கோவிஷீல்ட் தடுப்பூசி நேற்றைய தினம் இலங்கை வந்தடைந்தது, இதனையடுத்து அதனை முதல்கட்டமாக சுகாதாரப் பிரிவினருக்கு ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து, தேசிய தொற்று நோய்களுக்கான நிறுவனத்தின் மருத்துவ நிபுணர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரமவுக்கு ஏற்றப்பட்டது.

இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும்கொள்ள தேவையில்லை.

தடுப்பூசி குறித்த அனைத்து தகவல்களையும் ஆராய்ச்சிகளையும் துல்லியமாக ஆய்வு செய்ததைத் தொடர்ந்தே தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியது.

குறித்த தடுப்பூசி பாதுகாப்பானதாகும், இந்த தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையினால் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.