Header Ads



பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது பெற்றோரின் பொறுப்பு : பிரதமர்


தொற்று நோயை எதிர்கொள்வதற்காக பிள்ளைகளின் கல்வியை தாமதப்படுத்த முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்திக் கூறியுள்ளார்.

ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதைத் தெரிவித்தார்.

தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது பெற்றோரின் பொறுப்பு என்றும் இதை இலகுவாக எடுத்துக்கொள்வது பொறுப்பல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாடசாலைகளில் மாணவர் வரவு குறைந்து வருவதைக் கேள்வியுற்ற பின்பே பிரதமர் ராஜபக்ஷ இந்தக் கருத்துகளைக் கூறினார்.

No comments

Powered by Blogger.