Header Ads



கொழும்பில் வேகமாக பரவும் கொரோனா


கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மக்கள் மத்தியில் தொடர்ந்தும் அச்சம் நிலவுகிறது.

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 755 தொற்றாளர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 369 தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணபபட்டுள்ளனர்.

அத்துடன், கம்பஹாவில் 124 பேரும், களுத்துறையில் 80 பேரும், கண்டியில் 23 பேரும், மாத்தளையில் 22 பேரும், காலியில் 18 பேரும், மாத்தறையில் 17 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏனைய மாவட்டங்களில் 15 க்கும் குறைவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினம் கொவிட் தொற்று காரணமாக ஒரு மரணம் பதிவாகியுள்ளது.

ராகம பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நாட்டில் கொவிட் தொற்று காரணமாக மரணித்தோரின் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது. 

No comments

Powered by Blogger.