Header Ads



இப்படியும் நடக்கிறது


15 வயதான பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவித்து சந்தேகநபர் ஒருவரை அத்துருகிரிய பொலிஸார் இன்று -22- கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் இரண்டு ஆண்டுகளாக ஆபாச காணொளிகளை காண்பித்து சிறுமியை துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு, சிறுமி சந்தேகத்திற்கிடமான மாத்திரையை எடுத்துக் கொண்டார், இதனை அவதானித்த தந்தை, அது குறித்து விசாரித்துள்ளார்.

அது கருத்தடைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட மாத்திரை என தெரியவந்தது. இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பல சந்தர்ப்பங்களில் பெற்றோருக்கு தூக்க மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்கு வந்து சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சிறுமி வைத்திய பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. இது எல்லாம் தேவையில்லாத வேலை பாருங்கோ. எல்லாக் குற்றங்களுக்கும் பொலிஸ், நீதிமன்றம், சிறைவாசம் இவை எல்லாம் வேணும்தான். கற்பழிப்புக்கு இந்நடைமுறை எல்லாம் சரியே வராதுங்க. அரபு நாடுகளைப் பாருங்க. இப்படியான "கேஸ்" அங்கெல்லாம் அரிதினும் அரிது. விசாரிக்கும் பொலிஸ் OK ன்னா இருக்கவே இருக்கு Encounter. இந்தக் குற்றத்தைத் திருத்த எங்கட நாட்டில வேற வழியே கிடையாதுங்க.. இந்தியாவைப் பாருங்க. Encounter ன்னா வேறு பேச்சே கிடையாது.

    ReplyDelete

Powered by Blogger.