கையை துண்டித்து வீதியில் வீசிச்சென்ற கொலையாளிகள் - மீட்டியாகொடயில் சம்பவம்
மீட்டியாகொட எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மீட்டகொடவில் வசிக்கும் 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்கள் பாதிக்கப்பட்டவரின் ஒரு கையை துண்டித்து மீட்டியாகொட நான்கு சந்தி பகுதியில் விட்டுச் சென்றுள்ளதாக மீட்டியாகொட பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
உள்நாட்டுப் பாதுகாப்பு, உள்ளூர் பாதுகாப்பு, அதற்கு ஏகப்பட்ட அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர், பாதுகாப்புப்படையின் செயலாளர்கள், உள்ளூர் பாதுகாப்பு அனைத்தும் ஆயுதப்படையினரிடம் இவ்வளவும் இருந்தும் பட்டப்பக லில் கொலை செய்து மனித உடலின் கையைவெட்டி வீசும் கொடும் கொலையாளிகள் பட்டப்பகலில் சாதாரணமாக நடமாடுகின்றரர்கள். நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?
ReplyDeletePothu makkal paathukaappu amaichchar???
ReplyDelete