Header Ads



மலைநாட்டில் எதிர்காலத்திலும் நில, அதிர்வுகள் ஏற்படக்கூடும் - பேராசிரியர் அதுல


மத்திய மலைநாட்டில் எதிர்காலத்திலும் நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் எனவும் அது தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என, பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வு பிரிவின் சிரேஸ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பசறை - மடுல்சீமை காவல்துறைக்கு உட்பட்ட எக்கிரிய மற்றும் அதனை அண்டிய சில பகுதிகளில் இன்று -31- அதிகாலை உணரப்பட்ட சிறியளவான நில அதிர்வு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ரிக்டர் அளவுகோளில் 2 மெக்னிட்டியூட்டாக இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதுடன், கடந்த 22 ஆம் திகதி அதிகாலையும் எக்கிரிய மற்றும் வலப்பனையை அண்மித்த பகுதிகளில் இவ்வாறு நில அதிர்வு உணரப்பட்டிருந்தது.

No comments

Powered by Blogger.