Header Ads



தேசிய சிங்கங்கள் தற்போது எங்கே..? சஜித் கேள்வி


தேசிய செத்துக்களை,வளங்களைப்  பாதுகாக்கப்படுவதற்குப் பதிலாக உள்ளூர் வளங்களை ஏலம் விடப்பட விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன என்றும் முன்னர் இருந்த தேசிய சிங்கங்கள் தற்போது எங்கேயுள்ளனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, புத்தல எத்திலிவேவ "சத்கராய" நடமாடும் சேவையில் பங்கேற்ற போது வினவினார்.

அவர் மோலும் தெரிவிக்கையில்;

நீங்கள் தற்போது பல சிரமங்களை எதிர்கொள்கிறீர்கள்.  கடுமையான உடல் நலப் பிரச்சினைகள் உள்ளன. குழந்தைகளுக்கு கல்வி வழங்க இயலாமை, ஆன்லைன் வசதிகளை வழங்க இயலாமை என்று நம் நாட்டின் இந்த அப்பாவி குடிமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் உங்கள் வருத்தத்தை புரிந்து கொள்ளவில்லை.  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு வலுவான கல்வியைக் கொடுக்க முயற்சி செய்கிறார்கள் .அவர்களுக்கு ஆன்லைன் கல்விக்குத் தேவையான கருவிகளைக் கொடுங்கள் .ஆனால் பெற்றோர்களால் அதை வாங்க முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.ஆனால் நாட்டை ஆளும் பெரிய அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள்?  குழந்தைகளின் கல்வியை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, கோபுரங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தாமரை கோபுரம் என்று கூறுகின்றனர்.சமீபத்தில் ஒரு இரத்தின கோபுரத்தை உருவாக்கத் தொடங்கியுள்ளனர்.  இந்த கோபுரங்கள் அனைத்தும் வெளிநாட்டிலிருந்து கடன் வாங்கிய பணத்தினால் கட்டப்பட்டுள்ளன. கோபுரங்களை கட்ட அவர்கள் கடன் வாங்குகிறார்கள், ஆனால் கல்வியை மேம்படுத்த வளங்களை ஒதுக்காமல் இருக்கின்றனர்.  இன்று நாட்டில் என்ன நடக்கிறது?  இன்று நாட்டின் தேசிய வளங்கள் தேசிய சொத்துக்களை விற்கும் சகாப்தம் ஒன்று தோன்றியுள்ளது.  வெற்று அரசியல் தேவைக்கேற்ப ஏலம் தற்போதைய அரசாங்கத்தால் விடப்படுகிறது.இப்போது, ​​வெற்று அரசியல் காரணமாக, நாட்டின் சொத்துக்களை விற்கிறவர்கள், நாட்டின் நிலங்கள் மற்றும் நாட்டின் வளங்கள் ஆகியவை ஜனாதிபதி தேர்தலில் விற்பதாக பொதுத் தேர்தலிலும் குறிப்பிடப்படவில்லை. அது மாத்திரமா?இல்லை,ஒரு அங்குல நிலம் கூட வெளிநாட்டிவருக்கு விற்கப்படாது என்று கூறினார்கள், எனவே இவ்வாறு கூறிய அந்த சிங்கங்கள் இன்று எங்கே என்று வினவுகிறோம்.

இப்போது இந்த நாட்டைப் பாதுகாத்து, நாட்டைப் பாதுகாக்கும், நாட்டிற்கு உயிர் கொடுக்கும் சிங்கங்கள் எங்கே?  என்று வினவுகிறேன்.ஜனாதிபதித் தேர்தலின் போது இருந்த சிங்கங்களும் இன்று மறைந்துவிட்டன.  இன்று நாட்டில் ஆளும் கட்சி அமைதியாக உள்ளது.  பெரிய தேவைகள் காரணமாக இடங்களை விற்க விரும்புகிறார்கள்.நாங்கள் அந்த துண்டை விற்க மாட்டோம், இந்த துண்டை விற்க மாட்டோம்,நாங்கள் ஒரு துண்டு கூட கொடுக்க மாட்டோம் என்று மார் தட்டியவர்கள் இன்று எங்கே?

நமது நாட்டை சர்வதேச அளவில் விற்க வெறும் ஏலத்திற்கு வெற்று அரசியல் என்ற பெயரில் புவிசார் அரசியல்(Geo Politics)என்ற பெயரில் நம் நாட்டை துண்டு துண்டாக விற்க ஒரு பெரிய மோசடி இன்று தொடங்கப்பட்டுள்ளது.  நாட்டின் எல்லாப் பகுதிகளும் ஏலம் விடப்பட்டும் சகாப்தம்.

நாட்டின் வளங்களை மக்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் ஒர் சக்தியாக ஐக்கிய மக்கள் சக்தியை பலப்படுத்தி  நாங்கள் நிச்சயமாக இந்த மேசடிமிக்க ஏலம் போடும், விற்கும் யுகத்தை தோற்கடிப்போம் என்பதை நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன். 

அன்புள்ள மக்களே, ஐக்கிய மக்கள் சக்தி நிச்சயமாக நாட்டின்  சொத்துக்களைப் பாதுகாக்கும் எதிர்க்கட்சியாக இருப்போம் என்றும் நாட்டின் உண்மையான பெருமை, உண்மையான தேசபக்தி மற்றும் நாட்டின் உண்மையான தேசபக்தியை அபிமானத்தை நிலைநாட்டி  செயல்படுவோம் என்றும் சொல்ல இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன்.  

தேசத்தின் இந்த பெரும் துரோகத்தை நாம் தோற்கடிக்க வேண்டும்.  சர்வதேச சொத்து ஏலங்களுக்கு துண்டு துண்டாக நம் நாட்டை வழிநடத்தும் இந்த கொடூரமான செயலை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்.  இன்று மக்கள் ஆணைக்கு இந்த அரசாங்கம் துரோகம் இழைத்துள்ளது.  மக்கள் நம்பிக்கை மீறப்பட்டுள்ளது.  நம் நாட்டை உண்மையிலேயே பாதுகாக்கும் ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமே.

எங்கள் அரசாங்கத்தில், நாட்டின் சொத்துக்கள், வளங்கள் மற்றும் நிறுவனங்களை ஏலம் விடும் சகாப்தத்தை நாங்கள் நிச்சயமாக முடிவுக்குக் கொண்டு வருவோம், மேலும் 220 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்குரிய நிலத்தை மீண்டும் பாதுகாப்பதற்கான எங்கள் பயணத்தை மீண்டும் செயல்படுத்துவோம் என்றும், தெளிவான மற்றும் இதயப்பூர்வமான வாக்குறுதியை நான் உங்களுக்கு வழங்குகிறேன்.  69 இலட்சம் ஜனாதிபதி தேர்தலிலும் மற்றும் 68 இலட்சம் பொதுத் தேர்தல்களின் போதும் மக்கள் அளித்த வக்குகளுக்கு இன்று துரோகம் இழைத்து விட்டனர்.வாக்குறுதிகளை தாரைவார்த்து விட்டனர்.மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்து விட்டனர்.உன்மையான நாட்டுப்பற்றும் மக்கள் நலனும் கொண்ட ஒர் கட்சி தான் ஐக்கிய மக்கள் சக்தியாகும்.

இன்று குழந்தைகளை,பிள்ளைகளை மறந்துவிட்டார்கள், தாய்மார்களை மறந்துவிட்டார்கள். பாடசாலை செல்லும் குழந்தைகள் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சீருடை வழங்கும் திட்டம் இன்று நிறுத்தப்பட்டுள்ளது.  அந்த திட்டம் சரியாக நடக்கவில்லை.  அப்படியானால், ஜனவரி மாதமகியும் இன்னும் இல்லை. நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் சீருடை வழங்கப்பட்டிருக்க வேண்டும் .ஆனால் மாத  இறுதிக்குள் பெரும்பாலான பாடசாலைகளுக்கு சீருடை கிடைக்கவில்லை.  அது மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு கல்வியைத் தொடர எந்த வசதிகளும் இல்லை. நடமாடும் சேவையே இந்த கிராமப்புற பள்ளிகளின் அவல நிலையை எடுத்துக்காட்டுகிறது.  அந்தக் கோபுரங்களைக் கட்டுவதற்கு முன் இந்த பாடசாலை கட்டமைப்பை உருவாக்க நம் நாட்டில் கிடைக்கும் வரையறுக்கப்பட்ட நிதி மற்றும் வளங்களை ஏன் பயன்படுத்தக்கூடாது?

துரதிர்ஷ்டவசமாக, கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், குறைந்த பிறப்பு எடை கொண்ட குழந்தைகள் மற்றும் குறைந்த உடல் நிறை குறியீட்டைக் கொண்ட தாய்மார்களுக்கு திரிபோஷா வழங்கப்பட்டது.  எனது கையில் சமீபத்திய அரசாங்க சுற்றுநிரூபம் உள்ளது, இன்று தாய்ப்பால் கொடுக்கும் அனைத்து தாய்மார்களுக்கும் த்ரிபோஷா தடைசெய்யப்பட்டுள்ளது.  உடல் நிறை குறியீட்டெண் 18.5 க்கும் குறைவாக இருக்கும் தாய்மார்களுக்கு மட்டுமே திரிபோஷாவைக் கொடுங்கள்.  அப்போது தாய்ப்பால் கொடுக்கும் அனைத்து தாய்மார்களுக்கும் வழங்கப்பட்ட திரிபோசா இன்று குறைக்கப்பட்டுள்ளது.  இந்த செயல் எவ்வளவு மட்டகரமானது?  தாய்மார்கள் தலைமுறை என்பது நாட்டின் குடிமக்களைப் பெற்றெடுத்து, பத்து மாதங்கள் கருப்பையில் வைக்கப்பட்டிருந்த குழந்தைகளை வளர்த்தது ஆளாக்கிய உத்தமர்கள், அந்த தாய் தலைமுறையை நாம் முழு இதயத்தோடு பாதுகாக்க வேண்டுமல்லவா?  தாய் தலைமுறை இந்த நாட்டிலும் குழந்தைகளிலும் மிகவும் மதிப்புமிக்க வளமல்லவா?  தற்போதைய அரசாங்கம் இந்த நிலைப்பாட்டை  ஏற்கவில்லையா?  தாய்ப்பால் கொடுக்கும் ஒவ்வொரு தாய்க்கும் கொடுக்கப்பட்ட திரிபோசா இன்று ஏன் துண்டிக்கப்பட்டுள்ளது?  த்ரிபோசாவை உடல் நிறை குறியீட்டெண் 18.5 க்குக் குறைவாக உள்ள தாய்மார்களுக்கு மட்டுமே வழங்க இப்போது ஒரு சட்டம் இயற்றப்படுகிறது.  இதற்காகவா 69 இலட்சமும் 68 இலட்சமும் மக்களால் பொது ஆணை வழங்கப்பட்டது?  இந்த திரிபோசா ரேஷனைக் குறைத்து தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் சார்பாக எழுப்ப வேண்டிய குரலை, பாராளுமன்றத்தில் தேவையான தலையீட்டை நாம் நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், உயிர்வாழ்வதற்கான ஒரு ஒருங்கிணைக்கும் சக்தியாக அந்தப் பொறுப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதையும் நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன். 

இந்த நாட்டின் தாய்மார்கள், குழந்தைகள், மனிதர்கள் மற்றும் குடிமக்கள் அனுவரையும் பாதுகாக்கும் பெரிய கேடயமாக ஐக்கிய மக்கள் சக்தி மாறும் என்பதை இந்த  சந்தர்ப்பத்தில் கூறுகிறேன்.

No comments

Powered by Blogger.