Header Ads



குழந்தைகளை துன்புறுத்திய சந்தேகத்தில் வார்டன் கைது - அநுராதபுரத்தில் சம்பவம்


அனுராதபுரம் அவன்தி தேவி பெண்கள் சிறுவர் காப்பகத்தின் தலைமை வார்டன் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார். 

அத தெரணவில் ஒளிபரப்பாகும் ´உகுஸ்ஸா´ நிகழ்ச்சியில் குறித்த காப்பகத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்ட பின்னர் அமரா வீரசிங்க என்ற அதன் தலைமை வார்டன் இவ்வாறு பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

அங்கு இடம்பெறும் பல்வேறு மோசடிகள் மற்றும் தவறான நடவடிக்கைகள் தொடர்பில் ´உகுஸ்ஸா´ பல்வேறு வெளிப்படுத்தல்களை மேற்கொண்டது. 

வட மத்திய மாகாண நன்னடத்தை மற்றும் குழந்தை பராமரிப்புத் திணைக்களத்தின் கீழ் செயற்படும் இந்த காப்பகத்தில் சுமார் 60 சிறுமிகள் உள்ளனர். 

இந்த காப்பகத்தில் இடம்பெறும் தவறான நடவடிக்கைகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களுக்கு அமைய கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு சம்பவங்கள் ´உகுஸ்ஸா´ நாட்டிற்கு மிகவும் பொறுப்புணர்வுடன் வெளிப்படுத்தியது. 

சம்பவம் தொடர்பில் காப்பகத்தின் சிறுமிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலத்திற்கு அமைய குறித்த வார்டன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.