கொரோனா மரண எண்ணிக்கை அதிகரிப்பதற்கு எதிராக போராட வேண்டி ஏற்பட்டுள்ளது - சஜித்
கொவிட்-19 தடுப்பூசிகளை நாட்டிற்கு தொடர்ந்தும் கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
புத்தள பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் வேகமாக பரவிவரும் திரிபடைந்த வைரஸ் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
எனவே, கொவிட் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு எதிராக போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது ஒரு தொகை தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.
எனினும் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தொகை எமக்கு போதுமானதாக இருக்காது.
எனவே, மேலும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
Post a Comment