சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டோரை கண்காணிக்க, சிவில் உடையில் பொலிஸார்
கொவிட் தொற்று காரணமாக சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டோரை கண்காணிக்க, சிவில் உடையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சுகாதாரப் பிரிவினர் வழங்கியுள்ள சுகாதார விதிமுறைகளை சிலர் மீறி நடப்பதாக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
எனவே, இன்று(31) முதல் விசேட கண்காணிப்பில் பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment