Header Ads



தமது கடமையை செய்யாமலிருக்க கொரோனாவை காரணம் காட்டாதீர்கள், அச்சத்தால் ஒழிந்திருப்பதால் சவாலை வெற்றிகொள்ள முடியாது


தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், தமது கடமையை மேற்கொள்ளாமல் இருப்பவர்கள் கொரோனா வைரஸை காரணம் காட்ட வேண்டாம் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தொழில் வழங்குனர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

கொரோனா வைரஸ் அச்சத்தால் ஒழிந்திருப்பதன் மூலம் சவாலை வெற்றிக் கொள்ள முடியாது. கொரோனா வைரஸை சிறந்த திட்டத்தின் மூலமே வெற்றிகொள்ள முடியும். 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அநேக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன. உலகின் முன்னணி நாடுகளும் இதில் அடங்கும். இந்த நிலையில் நாட்டு மக்கள் சுகாதார வழிமுறைகளுக்கு முன்னுரிமை அளித்து செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

1 comment:

  1. பாரபட்சம் காட்டி, மக்களை தூண்டிவிட்டு ஒருதலை பட்சமாக நீங்கள் இருக்கும் வரை இலங்கையில் இருந்து கொறோனா அல்ல அதன் முதல் எழுத்தை கூட ஒழிக்க முடியாது. மக்கள் அச்சம் காரணமாக முடிந்தவரை மறைந்து இருக்கவே பார்க்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.