Header Ads



போட்டியில் பங்கேற்க வெளிநாடு செல்வதாயின், அது வெற்றிபெறவே என வீரர்கள் நினைவிற்கொள்ள வேண்டும்


கிரிக்கட் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுக்களுக்குமான கொடுப்பனவுகளை வழங்கும்போது, வீரர்களுக்கு திறமையின் அடிப்படையில் கொடுப்பனவுகளை வழங்கும் முறைமை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சின் உத்தரவாக, அனைத்து விளையாட்டுக்களுக்கும் இந்த முறைமையின் அடிப்படையில் செயற்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

போட்டி ஒன்றில் பங்கேற்பதற்றாக வெளிநாடு செல்வதாயின், அது வெற்றிபெறுவதற்காகவே என்பதை வீரர்கள் நினைவிற்கொள்ள வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.