Header Ads



சர்ச்சைக்குரிய தம்மிக்கவின் பாணி இலவசமாக விநியோகிக்கப்பட்டது - வரிசையாக நின்ற மக்கள்


சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, கேகாலை தம்மிக்க நாட்டு வைத்தியரால் தயாரிக்கப்பட்ட பாணி இன்றும் இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டது.

கேகாலை – நெலும்தெனிய உடுகும்புற பகுதியிலுள்ள அவரின் வீட்டுக்கு அருகில் பாணி பகிர்ந்தளிக்கப்பட்டது.

இன்று (21) காலை 9.30 மணி தொடக்கம் ஒன்றரை மணித்தியாலங்கள் பாணி பகிர்ந்தளிக்கப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார்.

சுகாதார விதிமுறைகளுக்கு அமைய அடையாளம் இடப்பட்டிருந்த இடத்திலிருந்து மக்கள் பாணியை பெற்றுக்கொண்டனர்.

இதன்போது பொலிஸாரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த நாட்களில் பணத்திற்கே இந்த பாணியை வழங்கிய போதும், இன்று இலவசமாக பாணி விநியோகிக்கப்பட்டதாக தம்மிக்க பண்டார குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இவர் நாட்டு வைத்தியர் கிடையாது. இவர் தச்சு வேலை செய்பவர். ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவனுக்கு கும்மாளம்தான்.

    ReplyDelete

Powered by Blogger.