Header Ads



18,000 போதை மாத்திரைகள் பிடிப்பட்டன - தென் ஆசியாவில் கைப்பற்றப்பட்ட பாரிய அளவு போதை மாத்திரை இது


பெல்ஜியம் நாட்டில் இருந்து இலங்கைக்கு எடுத்துவரப்பட்ட 9 கிலோ நிறையுடைய 18,000 போதை மாத்திரைகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 

தென் ஆசியாவிலேயே இதுவரையில் கைப்பற்றப்பட்ட பாரிய அளவான போதை மாத்திரை தொகை இதுவென தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த போதை மாத்திரைகள் 13.5 கோடி ரூபாய பெறுமதியுடையவை என தெரிவிக்கப்படுகின்றது. 

மத்திய தபால் பரிமாற்றத்திற்கு கிடைக்கப்பெற்ற பொதி ஒன்று தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் குறித்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.