Header Ads



திருகோணமலையில் 7 மாத குழந்தைக்கு கொரோனா


இன்று -08- திருகோணமலை நகர சபை பிரிவிற்கு உற்பட்ட சிறிமாபுர பிரதேசத்தில் 16 பி.சி.ஆர் பரிசோதனையும் 41 துரித அன்டிஜன் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதில் 7 மாத பெண் குழந்தைக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 04 ஆம் திகதி சிறிமாபுரம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசேதனையின் முடிவு இன்று வெளியிடப்பட்டதில் அதில் சிறிமாபுர பிரதேசத்தில் 3ம் ஒழங்கையில் 53 வயது பெண்ணிற்று கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டது 

இதனையடுத்து அப்பெண்மணியுடன் தொடர்பில் இருந்தவர்கள் அன்டிஐன் பரிசோதனை இன்று திருகோணமலை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் சையொழிபவன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. 

இதன்போது தொற்று உறுதியான பெண்மணியின் பேத்தியான 7 மாதக் குழந்தைக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

-திருகோணமலை நிருபர் கீத்-

No comments

Powered by Blogger.