Header Ads



மேலும் 4 இடங்களில் தங்கம், புதைந்திருப்பது கண்டுபிடிப்பு - பேராசிரியர் அதுல சேனரத்ன



இலங்கையில் நான்கு இடங்களில் தங்கம் புதைந்திருப்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேராதெனிய பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனரத்ன இதை குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சேருவில பகுதியில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

இப்போது அதற்கு மேலதிகமாக 4 இடங்களில் தங்கம் இருப்பது ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த தங்கம் கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பேராதெனிய பல்கலைக்கழகம், ஜெம் மற்றும் நகை மையம் மற்றும் கனடா மற்றும் அயர்லாந்து போன்ற ஆராய்ச்சி மையங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் இலங்கையில் தங்கம் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளன.

சேருவில பகுதியில் உள்ள இரும்புத் தாதுத் தளங்களிலிருந்து சுமார் மூன்று முதல் நான்கு கிலோமீட்டருக்கு தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 600 அடி ஆழத்தில் அகழ்வாராய்ச்சி செய்த பின்னர் சேருவில பகுதியில் தங்கம் இருப்பது முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக மேலும் ஆராய்ச்சி தேவை. மூத்த பேராசிரியர் ஒரு நிறுவனத்தின் ஆதரவோடு மேலும் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள முடியும் என்றார்.

3 comments:

  1. மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் மற்றொரு கிமிக் தான் இது. இது போன்ற பேய்க்கதைகளில் மயங்குவது தான் இந்த நாட்டு மக்களின் நிலைமை. அதனைச் சரியாக அறிந்து காலததுக்குக் காலம் மக்களை ஏமாறறும் விததைகள் அறிமுகமாகின்றன. அவற்றில் தங்கக்கதை மிகமுக்கியமானது.

    ReplyDelete
  2. This will be a mouth-watering moment for the Govt. politicians from top to bottom and they must be working overtime to corner as much of the land as possible for themselves. No doubt about that.

    ReplyDelete
  3. setup game, before they come to power everybody predicted they will start not only racism but also big lie and fabricated news, one of the biggest cursed family by people in the world,

    ReplyDelete

Powered by Blogger.