Header Ads



25 ஆம் திகதி முதல் 11 தர மாணவர்களுக்காக பாடசாலைகள் ஆரம்பம்


மேல் மாகாணம் உட்பட நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 11 ஆம் தரத்திற்காக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் இவ்வாறு 11 தர மாணவர்களுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 

இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இருப்பினும் குறித்த பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.