Header Ads



கட்டுநாயக்க விமான நிலையத்தில், இன்று தரையிறங்கிய 16 விமானங்கள்


கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 16 விமானங்கள் விமான சேவை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

இன்று -29- காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் 16 விமானங்கள் பயண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

விமான பயணிகள் 753 பேர் விமான பயண வசதிகளை பெற்றுக் கொண்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த காலப்பகுதியில் 8 விமானங்களில் 285 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளனர்.

அத்துடன் இந்த காலப்பகுதியினுள் 495 பேர் 8 விமானங்களில் கட்டுநாயக்க விமான நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

No comments

Powered by Blogger.