Header Ads



ஹோட்டலில் விருந்து, 13 யுவதிகள் உள்ளிட்ட 54 பேர் கைது - வழக்கும் பதிவு


தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி மெதிரிகிரிய நகரில் உள்ள ஹோட்டலில் விருந்துபசாரத்தில் ஈடுபட்ட 52 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 13 யுவதிகள் உள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஹோட்டலின் உரிமையாளர் மற்றும் முகாமையாளர் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட 38 இளைஞர்கள் உள்ளிட்டவர்கள் பிணையில் விடுவிடுக்கப்பட்டுள்ளதுடன் கஞ்சா வைத்திருந்த மூவர் ஹிங்குராங்கொட நீதிமன்றில்  இன்று(18) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி குற்றச்சாட்டில் 54 பேருக்கு எதிராக ஹிங்குராங்கொட நீதிமன்றில் நாளை (19) வழக்கு தொடரவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.