கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கோ, வேறு தரப்புக்கோ வழங்கினால் எதிர்ப்பு தெரிவிக்க தீர்மானம்
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு அல்லது வேறு தரப்பினருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 கட்சிகள் தீர்மானித்துள்ளன.
அமைச்சர் வீமல் வீரவன்சவின் கொழும்பில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று -30- இடம்பெற்ற குறித்த கட்சித் தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொவிட் தொற்றுக்கு உள்ளாகி பூரணமாக குணமடைந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு என்றால், கொழும்பு துறைமுகம் இந்தியாஙுக்கு தான்.
ReplyDeleteகோழைகளே, முதவில் அப்பாந்தோடலடையில் போராடி அங்கிருந்து சீனர்களை விரட்டுவ்கள், பின்னர் கொழும்பு துறைமுகத்தை பற்றி யோசிக்கலாம்