ஈஸ்டர் தாக்குதல் - 10 சந்தேக நபர்கள் விடுதலை
தொழிலதிபர் மொஹமட் இப்ராஹிம் இன்சப்புக்குச் சொந்தமான வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலையில் பணியாற்றி கடந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலை அடுத்து கைதுசெய்யப்பட்ட 10 சந்தேக நபர்களையும் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதிவான் ராஜீந்திர ஜெயசூரிய நேற்று(19) உத்தரவிட்டார்.
சந்தேக நபர்கள் மீது மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என்ற சட்ட மா அதிபரின் அறுவுறுத்தல்களின் பேரில் சந்தேக நபர்களை விடுவிக்குமாறு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு(ரிஐடி) நீதிமன்றைக் கோரியதை அடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதன்படி வாதியின் வேண்டுகோளின் பேரில் பத்து சந்தேக நபர்களையும் நீதிமன்றம் விடுவித்து வழக்கின் விசாரணையை முடிவுறுத்த உத்தரவிட்டது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பின் வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலையில் வெல்லம்பிட்டி பொலிஸார் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு குறித்த சந்தேக நபர்களை விசாரணைகளின் பின் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment