Header Ads



அமைச்சர் வாசுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 10 எம்.பி.க்கள் சுயதனிமைப்படுத்தலில்


கொவிட்-19 தொற்றுக்குள்ளான அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் நெருங்கிய தொடர்புள்ளவர்களாக 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிசிஆர் சோதனைக்கு உட்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் சுயதனிமைப்படுத்தலுக்கும் உள்ளாகியுள்ளனர்.

அமைச்சர் வாசுதேவ 2021ஆம் ஆண்டின் தொடக்கக் கூட்டத் தொடரின் நான்கு நாள் அமர்வுகளிலும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.