Header Ads



முதல் கொரோனா தடுப்பூசி Dr. ஆனந்தவிற்கு செலுத்தப்பட்டது, 3 இராணுவத்தினருக்கும் ஏற்றப்பட்டது


இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா ( Oxford Astra - Zeneca) தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இன்று -29-ஆரம்பிக்கப்பட்டது. 

அதன்படி, முதலாவது தடுப்பூசி வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரமவிற்கு கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் வழங்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இதேவேளை, தடுப்பூசி இராணுவத்தினர் மூவருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. 

கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் வைத்து அவர்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

மேலும் 5 வைத்தியசாலைகளில் இன்றைய தினம் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.