Header Ads



ஜனாஸாக்கள் விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிற்கும் - செல்வம் அடைக்கலநாதன் Mp


ஜனாஸாக்கள் விவகாரத்தில் முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிற்குமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் உயிரிழக்கும் முஸ்லிம்களின்  ஜனாஸாக்கள்  எரிப்புக்கு எதிராக, வவுனியாவில் இன்று(26) நடைபெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், ''முஸ்லிம்  மக்களின் ஜனாஸா விடயத்தில் அவர்களது கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். இது கூட்டமைப்பின் கோரிக்கையாக இருக்கிறது. 

இது நியாயமான கோரிக்கையே. உலக நாடுகளில் எந்த நாடும் இப்படி ஒரு அநியாயத்தை செய்யவில்லை.இந்த நாட்டிலே வாழ்கின்ற தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் அடிப்படை விடயங்களில் இந்த அரசு கைவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இது ஒரு மனித உரிமை மீறல் செயற்பாடு என்பதை குறிப்பிடவிரும்புகின்றேன். எனவேமுஸ்லிம்களின் உடல்கள் சமயரீதியாக புதைக்கப்படவேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இருக்க கூடாது. தமிழ் பேசும் மக்கள் மீது இந்த அரசு கொடூரமான கரங்களை நீட்டிக்கொண்டுவருகிறது. அதேபோல எமது நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் இருப்பிடத்தையும் இல்லாது ஒழிக்கும் செயற்பாட்டை மிக திறமையாக செய்து வருகின்றது.

இந்தவிடயத்தில் எங்களுக்குள் ஒற்றுமை வேண்டும். நாங்கள் சமய வேறுபாடுகள் இன்றி தமிழ் பேசும் மக்களாக ஒற்றுமையாக செயற்படும் போது தான் நாங்கள் இந்த அரசை எதிர்க்க முடியும். அடிபணிய வைக்கமுடியும். இந்த விடயத்தில் முஸ்லிம் மக்களுடன் கூட்டமைப்பு நிற்கும்." எனவும் தெரிவித்தார்.

4 comments:

  1. நன்றி ஐயா,
    தமிழ், முஸ்லிம், மலையக தேசிய இனங்கள் மொழி ரீதியாக ஒரே தமிழ் தேசிய இனமாக நிற்க வேண்டியது காலத்தின் தேவை. அப்படி ஒரே இனமாக அடையாளம் காணப்படும்போது நாமும் பெரும்பான்மை இனமே.

    ReplyDelete
  2. முஸ்லிம்களே!இந்த இனவாத நாய் பேச்சை நம்ப வேண்டாம் இதே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இந்த இனவாதியுடன் சேர்ந்து அடுத்த இனவாதி சார்ல்ஸ் நிர்மலன் சேர்ந்து தான் ஜனாசாக்களை மன்னாரில் புதைக்க மறுப்பு தெரிவித்தான் இப்பொழுது நல்லவன் மாதிரி நடிக்கிறான்.இதே ஜப்னா முஸ்லிமில் அவை செய்தியாக வந்தது கீழே தொடர்பை பாருங்கள்!டேய் அடைக்கலன் நாதன் மூடிட்டு போடா!புணர் வாழ்வளித்து சமுதாயத்தில் உண்ண, உணவில்லாமல் இடமில்லாமல்,தொழில்லலாமல் கஷ்ட படும் போராளிகளுக்கு பதில் சொல்லுடா நாதாரி.

    http://www.jaffnamuslim.com/2020/11/blog-post_721.html

    http://www.jaffnamuslim.com/2020/11/blog-post_614.html

    ReplyDelete
  3. மிக்க நன்றி ஐயா எமது உறவைக் காவுகொடுத்து வயறு பிழைக்கும் சில தரித்திரம்கள் இருக்கின்றனர். பெரும்பான்மை இனத்தில் எரிக்க வேண்டும் என்று கூறும் இனவாதிகளுக்கு இவர்களும் சமமானவர்களே.

    ReplyDelete
  4. Thank you sir for your concern. Muslims should join hands with TNA to bolster the unity between Tamils & Muslims.

    ReplyDelete

Powered by Blogger.