Header Ads



கொரோனா தடுப்பூசி இலங்கையிலும், இலவசமாக வழங்கப்படும் - Dr சுதர்ஷனி


உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரைத்த கொவிட்-19 தடுப்பூசியைக் கொள்வனவு செய்யவும் எந்த நேரத்திலும் அதை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கவும் அரசாங்கம் தயாராக உள்ளதாக ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்று நோய்கள் மற்றும் கொவிட்-19 கட்டுப்பாட்டு அமைச்சர் மருத்துவர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கூறினார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சுதர்ஷனி தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.