Header Ads



காலியில் வபாத்தானவர் 5 நாட்களின் பின்னர், இன்று தகனம் செய்யப்பட்டார்


காலி தெத்துடுகொடவில் கடந்த 19ஆம் திகதி கொரோனாவால் மரணித்தவரின் ஜனாஸா, காலி தடல்ல மயானத்தில், அரச செலவில் இன்று (24) தகனம் செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்​த 84 வயதான, மூன்று பிள்ளைகளின் தந்தையின் ஜனாஸாவே இவ்வாறு தகனம் செய்யப்பட்டுள்ளது.

எனினும், அந்த சடலத்தை (ஜனாஸா) தகனம் செய்வதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்த உறவினர்கள், சடலத்தை பொறுப்பேற்பதற்கும் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், சடலத்தை வைத்திசாலையின் சவச்சாலையில் வைத்திருப்பதற்கும் வைத்தியசாலை ஊழியர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

Powered by Blogger.