Header Ads



சுகாதார அதிகாரிகளின் அனுமதி கிடைத்தவுடன், விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு திட்டம் – பிரசன்ன ரணதுங்க


வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரு வதற்கு ஏதுவாக கொவிட் சுகாதார வழிகாட்டு தல்களின் படி விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் அனுமதி கிடைத்தவுடன் விமான நிலையங்களைத் திறக்க முடியும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் அனுமதி கிடைத்தவுடன் விமான நிலையத்தை மீண்டும் திறக்க முடியும் என்றும், இது தொடர்பாகச் சுகாதார அதிகாரிகளுடன் விசேட கலந் துரையாடல் இன்று பிற்பகல் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.