Header Ads



ஜனாஸா விவகாரத்தில் இறுதித்தீர்வு என்ன, என்பதை அரசாங்கம் ஒருமித்துத் தெளிவுபடுத்த வேண்டும் - முஜிபுர் ரகுமான்


(நா.தனுஜா)

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கொங்றீட் அடக்கஸ்தலங்களில் புதைக்க வேண்டும் என்று பிரதமர் கூறுகிறார். மாலைதீவில் அடக்கம் செய்யவேண்டும் என்று ஜனாதிபதி கூறுகிறார். தொழில்நுட்பக்குழுவின் அறிக்கை வரவில்லை என்று சுகாதார அமைச்சர் கூறுகிறார்.

இந்த விவகாரத்தில் இறுதித் தீர்வு என்ன என்பதை அரசாங்கம் ஒருமித்துத் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் வலியுறுத்தினார்.

முஸ்லிம்களின் மதநம்பிக்கையின் அடிப்படையில் ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும். ஆகவே அரசாங்கம் இதுகுறித்த இறுதித்தீர்மானத்தை அறிவித்து, வர்த்தமானி அறிவித்தலாக வெளியிட வேண்டும் என்றார். 

1 comment:

  1. சிங்கள சாமானியர்கள் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்வதில் பெரிதாக நாட்டம் கொள்வதில்லை. அவர்களைத்தட்டி உசுப்பித் தான் விழிக்கச் செய்யவேண்டும். அதிகமானவர்கள் சொந்த வாழ்கைப் போராட்டத்தில் தான் கவனம் செலுத்துவார்கள். நம்மவர் மொத்தச்செய்தியையும் சுருக்கி வழங்கியுள்ளார். நானும் போராடினேன் என்று கூறவேண்டும் அல்லவா. முன்னமே எல்லோரும் போடராடி விட்டீர்கள் அதன் முன்னேற்றம் ஒன்று தென்படுகின்ற இந்நேரத்தில் இரண்டையும் பொத்திக்கொண்டிருந்தாலே போதும். தாழி உடைந்த கதைபோல் ஆகிவிடாமல். முஸ்லிம் தலைவர்களில் சிலர் பேசினால் பேரினவாதிகளுக்கு சுருக்கென்று ஏறும் தன்மை ஏற்படுகிறது. காரணம் அவர்களின் வார்த்தைகளில் இனிமை, அன்பு, பணிவு இருப்பதில்லை. ஆணவம் அகங்காரம் காணப்படுவதால் காரியங்கள் சிதறுண்டு போகின்றன.

    ReplyDelete

Powered by Blogger.