புதிய வடிவ கொரோன பரவுவதால், சர்வதேச விமானப் போக்குவரத்தை நிறுத்திய சவுதி
வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டைப் பற்றிய அச்சத்தின் காரணமாக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கான அனைத்து சர்வதேச பயணிகள் விமானங்களையும் சவுதி அரேபியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இந்த வைரஸின் தன்மை பற்றிய மருத்துவ தகவல்கள் தெளிவாகும் வரை, ஒரு வாரம் வரை விமானத் தடை நீட்டிக்கப்படலாம் என்று சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் கூறுகிறது.
நாட்டின் நிலம் மற்றும் கடல் துறைமுகங்களும் ஒரு வாரத்திற்கு மூடப்படும்.
அதுமட்டுமின்றி, கடந்த மூன்று மாதங்களில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து திரும்பி வந்த அல்லது கடந்து வந்த எவரையும் உடனடியாக கோவிட் -19 க்கு சோதனை செய்ய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிறுத்தியு பயண நிறுத்தம், நாட்டின் சரக்கு விமானங்கள் மற்றும் விநியோக சங்கிலிகளை பாதிக்காது என்று அமைச்சகம் மேலும் கூறியது.
To boost the sale of covid vaccine
ReplyDelete