Header Ads



ஜனாஸா எரிப்பு வழக்கை தள்ளுபடி செய்தமை தவறானது, நாங்கள் பெரிதும் ஏமாற்றமடைந்திருக்கின்றோம் - ஹக்கீம்


கொவிட் 19 காரணமாக மரணிப்பவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனுக்களை காரணங்களை தெரிவிக்காது உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தமை தவறான நடைமுறையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வியாழக்கிழமை (3) பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். 

பாதுகாப்பு மற்றும் சட்டமும் ஒழுங்கும் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது, 

இது மிகவும் துரதிர்ஷ்டமானது இதனால் நாங்கள் எல்லோரும் பெரிதும் ஏமாற்றமடைந்திருக்கின்றோம்.  இவ்வாறான அடிப்படை உரிமை மீறல் வழக்குகளை விசாரிக்கும் சட்டபூர்வமான நியாயாதிக்கத்தைக் கொண்டுள்ள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியாத நிலையில் பாதிக்கப்பட்ட வழக்காளிகள் பெரிதும் கவலையடைந்துள்ளோம். 

இதே போன்றுதான், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட மனுக்களும் கூட, உயர் நீதிமன்றத்தில் பத்து நாட்களாக விசாரிக்கப்பட்டு, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர் உரிய காரணங்கள் காட்டப்படாமல் நிராகரிக்கப்பட்டன.

இரண்டு, மூன்று நாட்களாக விசாரிக்கப்படும் வழக்குகளின் இறுதியில் அவற்றை காரணங்கள் இன்றி நிராகரிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

இவற்றை பிரதம நீதியரசர்  அறியாதிருந்திருக்க  முடியாது. 

No comments

Powered by Blogger.