பலவந்த ஜனாசா எரிப்பை நிறுத்தி, மத உரிமையை மதியுங்கள் - கிறிஸ்தவ பாதிரிமார் பங்கேற்ற கூட்டத்தில் வலியுறுத்து
இலங்கை சமய சகவாழ்வு மையம் ஒழுங்கு செய்த பல்வேறுபட்ட மதங்களைப் பின்பற்றுவோரின் மத உரிமைகைளை மதித்து பலவந்த ஜனாசா எரிப்பை எதிர்த்து நல்லடக்கத்துக்கு அனுமதி வழங்குமாறு கோரும் கபன் சீலைப்போராட்டம் இன்று (30) அக்கரைப்பற்று பட்டிணப்பள்ளிவாசல் முன் நடைபெற்றது.
இதில் அக்கரைப்பற்று முகத்துவாரம் மற்றும் சாகாம வீதியிள்ள கிறிஸ்தவ பாதிரிமாரும் அக்கரைப்பற்று இஸ்லாமிய மத மற்றும் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.
நாட்டில் நீதியை நிலை நாட்டுவதற்காக கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் இணைந்து செயற்பட வேண்டும் என கலந்து கொண்ட கிறிஸ்தவ பாதிரிகள் கேட்டுக் கொண்டனர்.
இங்கு உரையாற்றிய கிறிஸ்த ;இஸ்லாமிய பெரியார்கள் இலங்கையில் பல்வேறுபட்ட மதங்களைப் பின்பற்றும் மக்களின் மத உரிமையை மனித உரிமையாக மதிக்குமாறு அரசாங்கத்தை கோரினர்.
Post a Comment