மகிந்த ராஜபக்ச காட்டிய கருணை, தற்போது பூகம்பமாக மாறியுள்ளது - அமைச்சர் சரத் வீரசேகர
ஜேர்மனியில் ஹிட்லர், கம்போடியாவில் பொல்பொட், ஈராக்கில் சதாம் ஹுசைன் போன்றோர் அழிக்கப்பட்டதும் அவர்களின் அரசியல் கட்சிகளும் இல்லாமல் செய்யப்பட்டதை போன்று, இலங்கையில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதும் அவர்களின் அரசியல் பினாமியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அந்தக் கட்சியை இல்லாமல் செய்யாது அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காட்டிய கருணை தற்போது பூகம்பமாக மாறியுள்ளதாகவும், இந்த விடயத்தில் தவறிழைக்கப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மறைந்திருந்த இந்த அரசின் இனஒழிப்புத்திட்டங்கள் சிறிது சிறிதாக தற்போது வௌிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. படுகுழியை நோக்கி முன்னேறும் அரசின் நடையும் துரிதமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது.
ReplyDelete