Header Ads



முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது பாதிப்பு என்றால், அவ்விடயம் எக்காரணம் கொண்டும் இடம்பெறாது


முஸ்லிம் உடல்களை அடக்கம் செய்வதால் ஏனையவர்களுக்கு பாதிப்பு என் றால் அவ்விடயம் எக்காரணம் கொண்டும் இடம்பெறாது என ஐக்கிய மக்கள்   சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.

தற்போது முஸ்லிம் ஜனாஸாக்களை தகனம் செய்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினையொன்றினை ஏற்படுத்தி யுள்ளதாகவும் முஸ்லிம் ஜனாஸாக்  களை அடக்கம் செய்வதால் ஏனை வர்களுக்கு பிரச்சினை ஏற்படும் என்றால் அவ்வாறானதொரு கோரிக்கை எச்சந்தர்ப்பத்திலும் எழுந்திருக்காது எனவும் இலங்கை அமரபுர பிரிவின் சங் கைக்குரிய கொடுகொட தம்மாவாச தேரர் அவர்களை சந்திக்கச் சென்ற வேளை அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எவ்வாறெனினும் அரசாங்கத்தினால்  முதலாவது வெளியிடப்பட்ட வர்த்த மானியில் தகனம் மற்றும் அடக்கம் செய்தல் இரண்டிற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும் பின்னர் அதில் மாற்றம் செய்யப்பட்டதாகவும்  ஏன் மாற்றம் செய்யப்பட்டது என்பதற்கான காரணம் தெளிவற்றிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.