"மாலைதீவில் இலங்கையர்களை நல்லடக்குவது, நாடற்றவர்களாக ஆக்குவதற்கு சமனாகும்"
- Inamullah Masihudeen -
கொவிட் 19 நோய்த் தொற்றினால் மரணமடையும் இலங்கை முஸ்லிம்களது உடல்களை முறையான இறுதி மார்க்க கடமைகளின் படி மாலைத்தீவில் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துதர முன்வந்த மாலைத்தீவு அரசிற்கு நாங்கள் நன்றி செலுத்துகிற அதேவேளை..
அவ்வாறானதொரு நடவடிக்கை உலக அரங்கில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் ஏன்பதனையும் முஸ்லிம்களை உயிருடனோ மரணித்தவர்களாகவோ நாடற்றவர்களாக ஆக்குவதற்கு சமனாகும் என்பதனையும் நாம் வலியுறுத்த விரும்புகிறோம்.
தேசத்தின் நலன்கருதி அத்தகையதொரு முன்னெடுப்பை அதிமேதகு ஜனாதிபதி கோடபாய ராஜபக்ஷ கைவிடல் வேண்டுமென்றும், வெளிவிவகார அமைச்சு குறிப்பாக தொழில்சார் இராஜதந்திரிகள் அவருக்கு ஆலோசனை வழங்க வேண்டுமெனவும் எதிர்பார்க்கிறோம்.
இலங்கையின் அரசியல் சாசனம் உறுதிப்படுத்தியுள்ள படி சகல இலங்கையரதும் தத்தமது சமய கலாசார மரபுகளின்படி மரணத்தின் போது இறுதிக்கடமைகள் மேற்கொள்ளப்படுவதற்கான உரிமை உத்தரவாதப் படுத்தப்படல் வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்!
well said bro.
ReplyDeleteThis decision is taken by government with advice of some Muslims ...so we should know consequence of such decisions...
ReplyDeletePolitically incorrect to do this
நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த பூமியில், நாம் மரணித்தபின் நம்மை அடக்கப்படமுடியாமல் வேறு தேசத்தில் புதைக்கக்கூறும் இனவெறி, மதவெறி பிடித்த அற்பர்கள் எவ்வாறு நம்மை இத்தேசத்தை நேசியுங்கள் தேசத்திற்காக சாவுங்கள் என்று கூறமுடியும்? ஒருமனிதனின் இறையாண்மை உரிமையே பிறந்து வளர்ந்து வாழ்ந்த பூமியில் அடங்கிப்போவதுதானே !
ReplyDeleteஇவர்களது கொட்டம் அடங்க இறைவனின் சாபம் இறங்கும் காலம் வெகு தூரத்திலில்லை !
சரியான கருத்து
ReplyDelete