Header Ads



முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் குறித்து அரசாங்கம் விரைவில் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் - ருவன்


கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் குறித்து அரசாங்கம் விரைவில் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, மக்களுடன் கலந்துரையாடி பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி விடுத்துள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தோரின் சடலங்களை அடக்கம் செய்வதா? எரிப்பதா? என்பதை அந்தந்த இன மக்களே தீர்மானிப்பர். எனினும் விசேட சந்தர்ப்பங்களின்போது அரசாங்கம் அது குறித்து தீர்மானம் எடுக்கையில் பௌத்த இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத் தலைவர்களுடன் கலந்துரையாட வேண்டும் என்பது ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.