Header Ads



அரிசிமலை விகாராதிபதி மரணம் - உடலை சுமந்துசென்ற உலமாக்கள், பிரதேச முஸ்லிம்கள் பெருமளவில் பங்கேற்பு (படங்கள்)


 - ஹஸ்பர் ஏ ஹலீம் -

அரிசிமலை ஆரன்ய சேனாசன பிரிவிற்குரிய யான்ஓய ரஜமகாவிகாரையின் விகாராதிபதி எலகம்மில்லவ சுகூதிவங்ச தேரர் இறைபதம் அடைந்ததுடன் அவரது இறுதிக்கிரிகைகள் நேற்று அரிசிமலை ஆரண்யவின் சேனாதிபதி பனாமுரே திலவங்ச தேரரின் வழிகாட்டுதலின்கீழ் இறுதி மரியாதையுடன் நடைபெற்றது.

இவ்விறுதிக்கிரிகைகளில் புல்மோட்டை பிரதே முஸ்லிம் உலமாக்கள், பொதுமக்கள், தமிழ் சகோதர ர்கள் இறுதிக்கிரிகைகள் நிறைவுபெறும் வரை கலந்து கொண்டதுடன் முஸ்லிம் உலமாக்கள் தேரரின் உடல் தாங்கிய பேழையை தகனம் செய்யும் இடத்திற்கு தூக்கிச்சென்றமை அனைவர் மத்தியிலும் நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் அண்மையில் புல்மோட்டை பிரதேசத்தில் காலமான உலமா ஒருவரின் இறுதிக்கிரிகைகளில் அரிசிமலை ஆரண்யவின் சேனாதிபதி பனாமுரே திலவங்ச தேரர் தலைமையிலான தேரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தமை இந்நாட்டில் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி இன ஒற்றுமையை வலுப்படுத்த ஏதுவாக அமைந்துள்ளது.

யான்ஓய ரஜமகாவிகாரையின் விகாராதிபதி எலகம்மில்லவ சுகூதிவங்ச தேரரின் இறுதிக்கிரியையில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான கபில நுவன் அத்துக்கோராள , கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள உட்பட பலரும் கலந்து கொண்டனர்.





7 comments:

  1. இவை போன்ற நிகழ்வுகளைக் கவனிக்கும் சின்னஞ்சிறுசுகளின் மனங்களின் வேற்றுமை நீங்கும். பயங்கரவாதிகள், அடிப்படைவாதிகள் என்று தொடர்பு சாதனங்களும் பெற்றோரும், பெரியோரும் பேசுவதனைக் கேட்டுக்கொண்டிருக்கும் சிறுவர்கள் இந்நிகழ்வுகளைக் காணும் போதுதான் முதலில் அவர்களும் மனிதர்கள்தான் என்று எண்ணத் தலைப்படுவார்கள்.

    ReplyDelete
  2. Sahajeewanaya pozum..enna senjalum singalawan singalawan than...

    ReplyDelete
  3. நல்லிணக்கம் என்ற பெயரில் நாசமாகின்றனர். அவர்களோ ஒரு இணக்கமும் வேண்டாம் எரித்துவிட வேண்டும் என்று நிற்கிறார்கள்.

    ReplyDelete
  4. சரி நாங்க தான் நல்லிணக்கம் என்று அவர்களின் பின்னால் செல்கிரோம் அவர்களுக்கும் நல்லிணக்கம் என்ற முறையில் முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்க சொல்ல சொல்லுங்களேன்.

    ReplyDelete
  5. NOT SHAME ?, IF I THINK YOU , VERY PITY ,OUR EEMAN HAS GONE VERY ,VERY FEABLE
    NO NEED GO FUNERAL WE FORGOT THAT CONVEYING ISLAM TO NON MUSLIM

    ReplyDelete
  6. onrum velai seyyathu. soda gas pol ellam marandu poividum.Ulamakkal thamilil mattumalla singalaththilum bayan seyya vendum.

    ReplyDelete
  7. soodu soranai illathavangal

    ReplyDelete

Powered by Blogger.