Header Ads



தற்போதைய காலத்திற்கேற்ற, அழகிய உபதேசம்


இறை விசுவாசி என்பவன் மிகவும் நாகரிகமானவன், உயர் ரசனை கொண்டவன், அடுத்தவர்களின் உணர்வுகளை மதித்து நடப்பவன், உள்ளங்களைப் புண்படுத்தாதவன், அவன் அடுத்தவர்களின் குற்றங்குறைகளை சுட்டிக் காட்டுவான், ஆனால் குத்திக் காட்ட மாட்டான், அவனது பேச்சுக்கள் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் அமையும், சீண்டும் விதத்தில் அமையாது. 

மொத்தத்தில் ஒரு முஃமின் எல்லா நிலைகளிலும் இங்கிதமாக நடப்பான், பண்பாடாக நடப்பான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"ஒரு முஃமின் சாடுபவனல்ல, சபிப்பவனல்ல, கெட்ட  வார்த்தைகள் பேசுபவனல்ல, கேவலமாக நடப்பவனுமல்ல." (திர்மிதி)

எல்லாம் வல்ல அல்லாஹ் என்னையும்  உங்கள் அனைவரையும் எல்லா நிலைகளிலும் இங்கிதம் பேணுபவர்களாக ஆக்கியருள்வானாக..!


 Ash-Sheikh Agar Muhammed


1 comment:

Powered by Blogger.