Header Ads



தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக, வட்சபில் போலி தகவல் பரிமாறியவர் கைது


சில தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வட்சப் ஊடாக போலி தகவல் பரிமாறிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கந்தானை பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் நேற்று (19) குறித்த நபர், கந்தானை பிரதேசத்திலுள்ள பலருக்கு ஆங்கிலத்தில் அத்தகவலை பகிர்ந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தனியார் நிறுவனமொன்றில் கணக்காய்வாளராக கடமையாற்றும் 31 வயதுடைய வெலிகம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.