திருகோணமலையில் சகல பள்ளிவாசல்களையும் மூட உத்தரவு - வீடுகளில் தொழுகை, இஸ்திபாரில் ஈடுபட கோரிக்கை
திருகோணமலையில் அனைத்து பள்ளிவாசல்களையும் தற்காலிகமாக மூடுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா திருகோணமலை நகரக்கிளை கோரிக்கை விடுத்துள்ளது.
இக்கோரிக்கை கடிதத்தினை அனைத்து பள்ளிவாசல்களிலும் தலைவர், செயலாளருக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா திருகோணமலை நகர கிளையினர் மற்றும் அனைத்துப் பள்ளிவாசல்களின் சம்மேளனமும் இணைந்து எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாகவும்,கிழக்கு மாகாண சுகாதார பணிமனையின் ஆலோசனைகளையும் ,மாவட்டத்தின் சுகாதார நலன் கருதியும் இன்று 21 ஆம் திகதி பிற்பகல் அசர் தொழுகையுடன் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாகப் பள்ளிவாசல்களில் நடைபெறும் ஐவேளைத் தொழுகை மற்றும் ஜும்மா தொழுகை எதுவும் நடைபெற மாட்டாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அனைத்து முஸ்லிம்களும் வீடுகளில் தொழுகை,இஸ்திக்பார் போன்றவற்றில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்வதாகவும் தலைவர்,செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
Post a Comment