ஜனாஸா அடக்கம் - எதிர்வரும் நாட்களில், இறுதித் தீர்மானம் வெளியிடப்படும் - அமைச்சரவை பேச்சாளர்
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களுக்கான அடக்கம் குறித்த சுகாதாரத் தரப்பினரின் தீர்மானம் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என்று இன்றைய -22- அமைச்சரவை ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதில் மேலெழுந்துள்ள பிரச்சினை குறித்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது, இணை அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம்கள் எதிர்நோக்கும் இந்த பிரச்சினையை மனிதாபிமான கண்ணோட்டத்தில் பார்த்து, விரைவில் தீர்வொன்றை வெளியிடுமாறு அரசு சுகாதாரத் தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
கொரோனா மரணங்களைக் கையாளும் விடயங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டல்களுக்கு அமையவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை, முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக மாலைதீவுக்கு அனுப்புவது குறித்து அமைச்சரவையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment