Header Ads



தேசியப் பட்டியல் யாருக்கு...?


எமது மக்கள் சக்திக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளும் இறுதி கலந்துரையாடல் நாளைய தினம் -08- இடம்பெறவுள்ளது என எமது மக்கள் சக்தியின் தலைவர் சமன் பெரேரா தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் சமன் பெரேரா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் மற்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகியோர் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருந்தாக வும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சியும் தமக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளவில்லை.

கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் கையொப்பமிட்ட ஆவணம் ஒன்றை அண்மையில் கையளித்து கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்றத்திற்கு செல்லுமாறு அழைப்பு விடுத்தபோதிலும், அவர் அதனை நிராகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. நீங்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் எங்களுக்குள் மூக்கை நுழைக்க மாட்டீர்கள்.

    ReplyDelete
  2. renduperukkum idaila oru debat onde wecchu yaaru nireye kutrem senjankalo avenukke anthe kedukedda paddiyala kuduththu tholainga illaddi rendu pereyum poddu thalliddu were oruwena poddalum even kekkaporan inthe 2 naayum iruntha enna illaddi enna

    ReplyDelete

Powered by Blogger.