Header Ads



டுபாயில் இலங்கையரின் மகத்தான சாதனை


டுபாயில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளி ஒருவரின் உடலில் இருக்கும் வைரஸை அழிக்க கூடிய CVDM இயந்திரத்தை இலங்கையர் ஒருவர் தயாரித்து அசத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டுபாயில் விமான மற்றும் மின்சார ரயில் பொறியியலாளராக செயற்படும் இலங்கையரான ஜீவனாந்த டி சில்வா என்பவரால் இந்த இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இந்த நிலையில் குறித்த புதிய இயந்திரம் வைத்திய நிறுவனத்திடம் முன்வைத்து அதற்கு அனுமதி பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஜீவனாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் உடலில் இருக்கும் வைரஸ் 10 நொடி என்ற சிறிய காலப்பகுதியினுள் அழிந்து விட கூடும் எனவும் கூறப்படுகின்றது.

இது தொடர்பான வெற்றிகரமான முடிவுகளை மேலும் வலுப்படுத்த தேவையான ஆய்வக வசதியை அரச மற்றும் தனியார் நிறுவனத்தின் தலையீட்டில் விரைவில் பெற்றுக் கொடுக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் விரைவாக அதற்கான நடவடிக்கை செய்தால் ஆயிரக்கணக்கான உயிரை காப்பாற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.