Header Ads



புரெவி புயலின் பாதையும் கடக்கும் நேரமும் அறிவிப்பு



புரெவி புயலின் பாதை தொடர்பான படத்தை “ஸ்கைமெட்வெதர்” வெளியிட்டுள்ளது.

‘புரெவி புயல்’ இலங்கையின் கிழக்கு கரையை இன்றிரவு 7 மணிக்கும் இரவு 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கடக்கும் என எதிர்பார்ப்பதாக, வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் உரையாற்றிய அமைச்சர் சமல் ராஜபக்ஷ, “ புயலின் தாக்கத்துக்கு முகங்கொடுக்கும் வகையிலான முன்னாயத்த நடவடிக்கையாக, மீனவர்களும் கடற்படையினரும் கிழக்கு கடலுக்குள் செல்லவேண்டாமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்நிலையில், “மிகவும் விழிப்பாக இருக்குமாறு மக்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது” என்றும் தனதுரையில் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.