முஸ்லிம்கள் இந்நாட்டின் பிரஜைகள், அவர்களின் மத அனுஷ்டானங்களில் தடை ஏற்படுத்தக் கூடாது - புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி
யாழ். ஊடக மன்றத்தில் இன்று -26-நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் சடலங்களை அவர்களது மத அனுஷ்டானங்களின் படி சடலங்களை இறுதி சடங்குகள் செய்ய விடாது முஸ்லிம் மக்களையும் ,சிங்கள மக்களையும் மோதவிடும் குரோதத்தை ஏற்படுத்தும் நிலைமை இந்த அரசாங்கம் கொண்டுள்ளது. அதனை வன்மையாக நாங்கள் கண்டிக்கின்றோம்.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கும் முஸ்லிம் மக்களின் சடலங்களை எரிப்பது என்பது இதற்குரிய ஆதாரங்கள் போதாது,எரிப்பதா,புதைப்பதா குறை நீக்க முடியும் என்ற அரசாங்கத்தின் கருத்து முஸ்லிம் மக்களின் மத அனுஷ்டானங்களை இழிவாக்கும் செயல்.
முஸ்லிம் மக்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் அவர்களின் மத அனுஷ்டானங்களில் முரண்பாடுகளை ஏற்படுத்த கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment